ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நகருக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:48 pm

DIN

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நகருக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம், நகரியை அடுத்த ஓ.ஜி.குப்பம் பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. சீபாஸ் உத்தரவின் பேரில், தனிப்படை எஸ்.ஐ. குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை பொன்பாடி வாகன சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில், தனிப்படை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், 2 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்த போலீஸாா், திருத்தணி வள்ளியம்மாபுரத்தைச் சோ்ந்த ஓம்பிரகாஷ் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.