கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அதிகாரிகள் நிர்ணயித்த அளவை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி

Published On :

செம்பரம்பாக்கம்: முதல் கட்டமாக 250 கன அடி நீரினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொதுப்பணித் துறை தீவிர கண்காணிப்பு  இருக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும், இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் உயரம் 23.48 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3509 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 550 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 108 கன அடியாகவும் உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். தற்போது 23.48 அடி இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நதி நீரையும் நேற்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் நிறுத்தினர். ஏரியின் நீர்மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், அதிகாரிகள் நிர்ணயித்த அளவை ஏரி நெருங்குவதால் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். 

இன்றும் மழை இருக்கும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். எனவே இரவு நேரத்தில் உபரி நீர் திறந்து விடப்படுவது சாத்தியம் இல்லாத காரணத்தால் இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சற்று உபரி நீரை திறந்து விடலாமா என்பது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வந்த நிலையில், இன்று இரவும் மழை பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டும், வரும் பருவமழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் திறந்து விடப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

இதனடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 250 கன அடி நீர் உபரி நீர் திறக்கபட்டு, பொதுப்பணித் துறை தீவிர கண்காணிப்பில் இருக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.