கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி தண்டலம் கிராமத்தில் தொடர்ந்து உயர் மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் நாசமாவதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் எளாவூரில் உள்ள மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை நுழைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலக நிர்வாகத்தின் கவனக்குறைவின் காரணமாக அண்மையில் தண்டலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பலியானார்.

அவ்வாறே கடந்த 6 மாதத்திற்கு முன்பு தண்டலம் பகுதியில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளில் சுமார் ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன பெட்டி, ஏசி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் நாசமானது.
இந்நிலையில் கடந்த ஜுன்-15 அன்று மீண்டும் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக ரூ.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் மீண்டும் ஒரு முறை நாசமானது.
இப்படி தண்டலம் பகுதியில் தொடர்ச்சியாக மின்வாரியத்தின் அலட்சிய போக்கால் கால்நடைகள்,மனித உயிர் பலியாவது மட்டுமல்லாது, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் நாசமடைகிறது.
இந்த போக்கு தொடர்வதை கண்டித்தும், இதற்கு மின்வாரியம் முடிவு கட்ட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தண்டலம் பகுதி மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து ஊர்வலமாக சென்று எளாவூரில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் நுழைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதையும் படிக்க: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.1 கோடி நிதி அரசாணை வெளியீடு
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கே.முருகன் தலைமை தாங்கினார். எஸ்.மணிகண்டன், இ.சங்கர், ஜி.டில்லி முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாநில துணை தலைவர் ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஜெ.அருள், மாவட்ட தலைவர் ஜீவா, ஒன்றிய செயலாளர என்.செங்கல்வராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் என்.ராஜேஷ் கண்டன உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முரளி சமாதானம் பேசி, தண்டலம் பகுதியில் புதிய மின்கம்பிகள் மாற்றி, மின்பாதையில் பிரேக்கர்கள் அமைப்பதாக கூறி, உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



