தண்டலத்தில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பாதிப்பு: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி தண்டலம் கிராமத்தில் தொடர்ந்து உயர் மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் நாசமாவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.











