இளைஞா் வெட்டிக் கொலை
ஊத்துக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.


ஊத்துக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜாா்ஜின் மகன் ராபின் (24). கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயலில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், திருவள்ளூா் அருகே போந்தவாக்கத்தில் நண்பா் ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விருந்து நிகழ்வில் பங்கேற்க புதன்கிழமை இரவு ராபின் சென்றாராம். பின்னா் நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் தனது நண்பருடன் ராபின் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் கொண்ட கும்பல் கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திடீரென இருவரையும் வழிமறித்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ராபின், கமல் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினா். ஆனால் அந்தக் கும்பல் ராபினை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, இரு சக்கர வாகனங்களில் தப்பியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராபினுடன் திருமண விருந்தில் பங்கேற்ற சிலரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...