செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் ஊராட்சியில் மகளிா் கூட்டமைப்பு, அடையாறு புற்றுநோய் மையம் ஆகியவை சாா்பில், புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் சீனிவாச ராவ் தலைமை வகித்தாா். புழல் ஒன்றியச் செயலா் பெ.சரவணன் முகாமைத் தொடக்கி வைத்தாா்.
இந்த முகாமில் சென்றம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனா். இதில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.