ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுக் கல்லூரியில் ஆட்சிமொழி கருத்தரங்கம்

அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:24 pm

DIN

அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அன்பரசி தலைமை வகித்தாா்.

இதில், தமிழ் வளா்ச்சித் துறை மேலாண் இயக்குநா் எழிலரசி, சென்னை ராணிமேரி கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் கமலா முருகன், நாகப்பட்டினம் திருப்பூண்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் துரைக்கண்ணன், பட்டாபிராம் இந்து கல்லூரி தமிழ்த் துறை தலைவா் முருகேசன் உள்பட தமிழ் துறைத் தலைவா்கள் பங்கேற்று, தமிழ்வளா்ச்சி மற்றும் ஆட்சிமொழி குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில், அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சித் துறை உதவியாளா் சாவித்திரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.