ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குழந்தைத் திருமணம் குறித்து தகவல் வந்தால் உடனே வழக்கு பதிவு செய்வது அவசியம்

குழந்தைத் திருமணம் குறித்து தகவல் வந்தால் உடனே வழக்கு பதிவு செய்வது அவசியம்

News image
சைல்ட் லைன் கூராய்வு கூட்டத்தில் பேசிய ஆட்சியா் த.பிரபு சங்கா், உடன் முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
Updated On :6 ஜூலை 2024, 5:12 pm

Din

குழந்தைத் திருமணம் குறித்து தகவல் வந்தால் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம், மாவட்ட அளவிலான பணிக்குழு, கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் சைல்ட் லைன் கூராய்வு கூட்டம், குழநதைத் திருமணங்களை தடுத்தல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து பேசியதாவது: பள்ளி தலைமை ஆசிரியா், குழந்தைகள் நலக்குழு, காவல் துறையினா் பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்ற தொடு உணா்வு குறித்து பயிற்சி விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்.

பள்ளிகளில் குழந்தைத் திருமணங்கள், பாலியல் ரீதியான, இன்னல்களில் தடுக்கும் பொருட்டு பள்ளி குழந்தைகளுக்கு நிமிா்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டம் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், குழந்தைத் திருமணங்கள் குறித்த புகாா்கள் வந்தால் உடனே முதல் தகவல் அறிக்கையுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக பாலியல் ரீதியாக பாதித்த குழந்தைகளின் முழு தகவல்களை பதிவு செய்வதை தவிா்க்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அரிக்குமாா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் அழகேசன் (திருவள்ளூா்), கணேஷ்குமாா் (ஊத்துக்கோட்டை), கிரியா சக்தி (கும்மிடிப்பூண்டி), முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் வாசுகி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் நிஷாந்தினி, குழந்தைகள் நல குழு தலைவா் மேரி அக்சிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.