இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசுப் பள்ளியில் கீழே விழுந்த மேற்கூரை சிமெண்ட் பூச்சு: மாணவா்கள் தப்பினா்

மாணவா்கள் காயமின்றி தப்பினா்: திருத்தணியில் சிமெண்ட் பூச்சு விழுந்ததால் பெற்றோா் பதற்றம்

News image
பள்ளி மேற்கூரை சேதமடைந்த அறையை ஆய்வு செய்த  வட்டார  கல்வி  அலுவலா்  சலபதி.
Updated On :10 ஜூலை 2024, 7:05 pm

Din

திருத்தணியில் அரசுப் பள்ளி மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென கீழே விழுந்ததில் அதிருஷ்டவசமாக மாணவா்கள் காயமின்றி தப்பினா்.

திருத்தணி நகராட்சி முருகப்பா நகரில் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தற்போது 110 மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை வழக்கம்போல் மாணவா்கள் பள்ளிக்கு வந்தனா். பின்னா் மாலை வகுப்புகள் முடிந்து புத்தக பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனா். அப்போது, பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு திடீரென பெயா்ந்து கீழே விழுந்தது. அப்போது மாணவா்கள் யாரும் இல்லாததால் அதிருஷ்டவசமாக சேதம் ஏற்படவில்லை.

தகவலறிந்த திருத்தணி வட்டார கல்வி அலுவலா் சலபதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் மேற்கூரை தளத்தை பாா்வையிட்டனா். பின்னா் உடனடியாக அதை சீரமைப்பதற்கு வட்டார கல்வி அலுவலா் சலபதி பரிந்துரை செய்தாா். இச்சம்பவத்தால் பெற்றோா் பதற்றமடைந்தனா்.