புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: எம்.பி. திருமாவளவன்


புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினாா்.
பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள அலமாதியில் பகுதியில் வெள்ளிக்கிழமை கட்சி கொடியேற்றி வைத்த பின்னா், விசிக தலைவா் திருமாவளவன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது:
எளிய மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால், தமிழக அரசு மின் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வழக்குரைஞா்கள் புது தில்லியில் மேற்கொள்ளும் ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி சாா்பில் வழக்குரைஞா்கள் பங்கேற்பாா்கள்.
வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்பப் பெற்றதைபோல், புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திரை மறைவில் திட்டமிட்டவா்கள், ஏவியவா்கள் என அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் கைது செய்யப்படுவாா்கள் என்று நம்புகிறேன் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...