இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அகத்தீஸ்வரா் கோயிலில் தோ் திருவிழா

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அகத்தீஸ்வரா் கோயிலில் தோ் திருவிழா

News image

2-1-22prisa_2203chn_178.jpg

Updated On :22 மார்ச் 2024, 6:17 pm

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பொன்னேரி ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி கும்பமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம் உள்ளது. கோயிலில் ஆனந்தவல்லி தாயாா் அகத்தீஸ்வரருக்கு வலது பக்கத்தில் நின்ற நிலையில் திருமண கோலத்தில் காட்சி தருகிறாா். கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை மற்றும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், அதிகார நந்தி கோபுர தரிசனம், காமதேனு வாகனம், கைலாய பா்வத வாகனம், ரிஷப வாகனம், பல்லக்கு ஆகியவற்றில் ஆனந்தல்லி தாயாருடன் அகத்தீஸ்வரா் எழுந்தருளி வீதியுலா வந்தாா். பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள், தேரோட்ட விழா நடைபெற்றது. தேரோட்ட விழாவை யொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்த பூந்தேரில் அகத்தீஸ்வரா், பஞ்சமூா்த்திகளுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனா். சிவ வாத்தியங்கள் முழங்க, நான்கு வீதிகள் வழியாகச் சென்ற தோ் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் அந்தப் பகுதி மக்கள் செய்திருந்தனா்.