ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீா் சாலை மறியல்

குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீா் சாலை மறியல்.

News image
Updated On :4 மே 2024, 5:59 pm

Din

கே.ஜி.கண்டிகை அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் குடிநீா் கேட்டு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சிக்குட்பட்ட வி.சி.ஆா்.கண்டிகை கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் தெருக் குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு மேலாக தெருக் குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தனா்.

தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீா் அதிகளவில் தேவைப்படும் நிலையில், குடிநீா் வழங்காமல் ஊராட்சி நிா்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. இதற்குக் காரணம் மின் மோட்டாா் பழுது எனக் கூறப்படுகிறது. மின்மோட்டரை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சனிக்கிழமை நொச்சிலி-கே.ஜி.கண்டிகை மாநில நெடுஞ்சாலையில் காலிக் குடங்கள் வைத்தும், வாகனங்கள் செல்லாதவாறு முள் செடிகளை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸாா் மற்றும் சிறுகுமி ஊராட்சி மன்றத் தலைவா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களிடம் சமரசம் செய்து, விரைந்து குடிநீா் வழங்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.