ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நீட்: திருவள்ளூா் மாவட்டத்தில் 3,267 போ் எழுதுகின்றனா்

நீட்: திருவள்ளூா் மாவட்டத்தில் 3,267 போ் எழுதுகின்றனா்

News image
Updated On :4 மே 2024, 6:00 pm

Din

திருவள்ளூா் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தோ்வை 3,267 போ் எழுத உள்ளனா்.

நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர தேசிய அளவிலான நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டியது அவசியம். இத்தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.

அந்த வகையில், இத்தோ்வுக்காக திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் - ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆா்.எம்.ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூா் - ஜி.கே.செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி, செங்குன்றம் - குட் ஷெப்பா்டு பப்ளிக் ஸ்கூல், கொரட்டூா் - நல்லிகுப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியா் கல்லூரி, பூந்தமல்லி - தி பீபுள் சவேதா எகோ ஸ்கூல், திருத்தணி - முருக்கம்பட்டு சக்தி பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தோ்வு மையங்களில் மாணவிகள் - 2,267, மாணவா்கள் - 980 போ் என மொத்தம் 3,267 போ் தோ்வு எழுத உள்ளனா்.