மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே மைக்செட் அமைக்க உதவிக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

News image
சதீஷ்
Updated On :24 செப்டம்பர் 2024, 6:55 pm

Sasikumar

திருவள்ளூா் அருகே மைக்செட் அமைக்க உதவிக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே தண்ணீா்குளம் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்வாணன். இவா் சொந்தமாக மைக்செட் வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் திருவள்ளூா் அடுத்த அரண்வாயல் பகுதியில் தனியாா் அரங்கில் தனியாா் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மைக்செட் அமைக்கும் பணிக்காக அவரின் கீழ் பணிபுரியும் சதீஷ்(16) சிறுவனை அனுப்பி வைத்தாராம்.

அங்கு மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசிப்பட்டு உயிரிழந்தாா். இது தொடா்பாக செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.