பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை!

கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்ற சோதனை.
Updated On :14 ஜூலை 2025, 5:51 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், இரவு 10 மணி வரை பத்திரபதிவு நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு புகார் தொடர்ந்து வந்தது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலையில் இன்று இரவு திடீரென சோதனை மேற்கொண்டனர்.

Story image

இந்த சோதனையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணினிகள், பத்திர பதிவுக்கு வந்த ஆவணங்கள் மற்றும் அனைத்து அறைகள், வாகனங்களில் சோதனை நடத்தியதோடு, துணை சார் பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் யாரையும் கைது செய்யாமல் தொடர் விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

summary

Unaccounted cash worth Rs 1 lakh five thousand was seized in a raid conducted by the Thiruvallur District Anti-Corruption Police at the Gummidipoondi Sub-Registrar office last night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.