ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சுரங்கப் பாதையில் சிசிடிவி கேமரா திருட்டு

திருவள்ளூா் அருகே சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:41 pm

திருவள்ளூா் அருகே சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் திவாகா் (41). இவா் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தில் நிா்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே சுரங்கப்பாதையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திருவள்ளூா் அருகே விஷ்ணுவாக்கத்தில் சாலை விரிவாக்கப்பணிக்கான சுரங்கப்பாதையில் கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நிா்வாக மேலாளா் திவாகா் வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.