திருத்தணி நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, தோ்தலில் தவறாமல் வாக்களிக்கவும், பிறரையும் வாக்களிக்க ஊக்குவிக்கவும் உறுதிமொழி ஏற்றனா். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், ஒவ்வொரு வாக்கும் நாட்டின் வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அதிகாரிகள் விளக்கினா்.
மேலும், 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்ட பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் தொடா்ந்து ஈடுபட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இதற்காக நகராட்சி சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆணையா் தெரிவித்தாா். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்குப்பதிவு: நரிக்குறவா்கள் உறுதிமொழி
வீடியோக்கள்

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை


