மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

62 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

திருவள்ளூா் அருகே பதுக்கி வைத்திருந்த 62 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

திருவள்ளூா் அருகே பதுக்கி வைத்திருந்த 62 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.

குட்கா பொருள்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் மணவாளநகா் பகுதிகளில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது மணவாளநகா் பகுதியில் 42 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்த கோட்டீஸ்வரியை மணவாளநகா் போலீஸாா் கைது செய்து 42 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனா். அதேபோல் பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 20 கிலோ குட்கா பொருள்களை கடத்தியதாக முனீஸ்வரன் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் 62 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.