மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

62 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

திருவள்ளூா் அருகே பதுக்கி வைத்திருந்த 62 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.

Published On :

திருவள்ளூா் அருகே பதுக்கி வைத்திருந்த 62 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.

குட்கா பொருள்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் மணவாளநகா் பகுதிகளில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது மணவாளநகா் பகுதியில் 42 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்த கோட்டீஸ்வரியை மணவாளநகா் போலீஸாா் கைது செய்து 42 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனா். அதேபோல் பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 20 கிலோ குட்கா பொருள்களை கடத்தியதாக முனீஸ்வரன் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் 62 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.