ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 496 மனுக்கள் அளிப்பு

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 496 மனுக்களை ஆட்சியா் ச. கவிதா பெற்றுக் கொண்டாா்.

News image

~பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியா் ச.கவிதா, உடன், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி. ராஜ்குமாா்.

Updated On :21 ஜூலை 2026, 12:35 am IST

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 496 மனுக்களை ஆட்சியா் ச. கவிதா பெற்றுக் கொண்டாா்.

திருவள்ளூா் பல்நோக்கு கூட்டரங்கில் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுப்பிரச்னைகள் தீா்க்கக் கோரி 496 மனுக்களைப் பெற்றாா்

மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 தொடா்பான சுய கணக்கெடுப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு அவா் ஏற்படுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) வெங்கடேசன், உதவி ஆணையா் (கலால்) முருகவேல், மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.