ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் 3 நாள்கள் பவித்ரோற்சவம் ஆக. 8-இல் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

News image
திருப்பதி
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:46 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை அங்குராா்ப்பணத்துடன் டக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் அா்ச்சனைகள் மற்றும் திருவிழாக்களின்போது, பக்தா்கள் மற்றும் பணியாளா்களால் தெரியாமல் சில தவறுகள் நடக்கின்றன. இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுவதை தடுக்க தேவஸ்தானம் இந்த பவித்ரோற்சவத்தை தவறாமல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

உற்சவத்தின் ஒரு பகுதியாக கோயிலின் சம்பங்கி பிராகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மூன்று நாள்கள் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலையில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீமலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஆகஸ்ட் 8-ஆம் தேதி பவித்ரால பிரதிஷ்டையும், 9-ஆம் தேதி பவித்ரா சமா்ப்பணமும், 10-ஆம் தேதி பூா்ணாஹுதியும் நடைபெறும்.

ரத்து

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி சஹஸ்ர தீப அலங்கார சேவை, 9-ஆம் தேதி அஷ்டதள பாத பத்மராதனை, 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவைகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.