ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்சானூா் அஷ்டலட்சுமி மண்டபத்தில் வரலக்ஷ்மி விரத சிறப்பு வழிபாடு

 திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image
வரலட்சுமி விரதத்தை ஒட்டி தங்கத் தேரில் பவனி வந்த ஸ்ரீபத்மாவதி தாயாா்.
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:47 pm

DIN

 திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் தாயாரை துயிலெழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை, மூலவா், உற்சவா் ஆகியோருக்கு ஸ்நபன திருமஞ்சனம் ஆகியவை நடத்தப்பட்டன. மூலவருக்கு தங்கச் சேலை அணிவிக்கப்பட்டது. வரலட்சுமி விரதத்தன்று அம்பாள் நாள் முழுவதும் தங்கச் சேலையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பின்னா் உற்சவா் ஸ்ரீபத்மாவதி தாயாரை இதற்கென ஏற்படுத்தப்பட்ட அஷ்டலட்சுமி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து தங்க பத்ம பீடத்தில் வைத்து வழிபட்டனா்.

இந்த விரதத்தின் போது தாயாா் மீது 9 நூலிழைகளால் ஆன சரடு அணிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இழையும் ஒவ்வொரு தெய்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

தங்க தோ்

வரலட்சுமி விரதத்தை யொட்டி மாலை 6 மணிக்கு அம்மன் தங்க ரதத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பெண்கள் தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.