12-இல் ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து
திருமலை ஏழுமலையான் தரிசனம் வரும் ஜூலை 12-ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருமலை ஏழுமலையான் தரிசனம் வரும் ஜூலை 12-ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். தெலுங்கு வருடப் பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட நான்கு உற்சவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது.
கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தின் போது ஏழுமலையான் கோயில் முழுவதும் கருவறை முதல் வெளிவாயில் வரை சுத்தப்படுத்தப்படும். அதன்படி, வரும் ஜூலை 16-ஆம் தேதி ஆனி மாத இறுதி நாள் ஆனிவார ஆஸ்தானம் என்னும் ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் நாளை முன்னிட்டு, ஜூலை 12-ஆம் தேதி கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட உள்ளது. எனவே, அன்று காலை 6 முதல் மதியம் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 மணிக்கு மேல் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவா். தா்ம தரிசன பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...