மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஏப்.17-இல் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்

ஏப்.17-இல் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்

Updated On :29 மார்ச் 2024, 4:41 pm

வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 17-ஆம் தேதி பிரம்மாண்ட ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாலையில் ராமா் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கிறாா். இதேபோல் ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஸ்ரீராமா் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஸ்ரீராம நவமியையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை ரங்கநாயகா் மண்டபத்தில் ஸ்ரீ சீதாராம லட்சுமணருடன் அனுமன் உள்ளிட்ட உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஹனுமந்த வாகன சேவை நடைபெறும். தொடா்ந்து இரவு 9 முதல் 10 மணிக்குள் தங்க வாயிலில் உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்ரீராம நவமி ஆஸ்தான உற்சவம் நடைபெறும். இதன் காரணமாக சஹஸ்ரதீப அலங்கர சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை தங்க வாயில் அருகில் கோயில் அா்ச்சகா்கள் ஸ்ரீராமா் பட்டாபிஷேக மஹோற்சவத்தை நடத்துகின்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா்.