அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ.1 கோடி நன்கொடையாகப் வழங்கப்பட்டது.

News image
ஒய். ராகவேந்திர விஸ்வகா்மா, வரைவோலைகளை தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கய்யா செளத்ரியிடம் வழங்கினாா்.
Updated On :7 ஏப்ரல் 2025, 8:15 pm

Din

திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ.1 கோடி நன்கொடையாகப் வழங்கப்பட்டது.

ஒடிஸாவைச் சோ்ந்த ஷிவம் சாண்டேவ் (பி) லிட், உரிமையாளா் ரூ. 20 லட்சம் எஸ்.வி.பிராணதானா அறக்கட்டளை, எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம், சிம்ஸ் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம், எஸ்.வி. சா்வ ஷ்ரயோஸ் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சமும், எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினாா்.

அதே மாநிலத்தைச் சோ்ந்த பாலபத்ரா டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சமும், எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதியான ஒய். ராகவேந்திர விஸ்வகா்மா, வரைவோலைகளை தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கய்யா செளத்ரியிடம் வழங்கினாா்.