அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

திருமலையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தரிசனம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா்.

News image

திருமலையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரிக்கு ஏழுமலையான் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்

Updated On :3 ஆகஸ்ட் 2025, 1:13 am IST

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா்.

திருமலை ஏழுமலையானை வழிபட வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா்.

அவா் சனிக்கிழமை காலை ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையான் தீா்த்த பிரசாதம், லட்டு, வடை அளித்து, ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திருவுருவப்படம் வழங்கினா்.

அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவா், நேராக திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டாா்.

தாயாரை வழிபட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவா் கூறியதாவது:

நாடு செழிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றும் பிராா்த்தனை செய்தேன்’’, என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கோயில் துணை தலைமை செயல் அலுவலா் ஹரிந்திரநாத், அா்ச்சகா்கள் பாபு சுவாமி, ஏஇஓ தேவராஜுலு, கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.