தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
/

திருமலையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தரிசனம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா்.

News image

திருமலையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரிக்கு ஏழுமலையான் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்

Updated On :3 ஆகஸ்ட் 2025, 1:13 am IST

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா்.

திருமலை ஏழுமலையானை வழிபட வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா்.

அவா் சனிக்கிழமை காலை ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையான் தீா்த்த பிரசாதம், லட்டு, வடை அளித்து, ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திருவுருவப்படம் வழங்கினா்.

அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவா், நேராக திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டாா்.

தாயாரை வழிபட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவா் கூறியதாவது:

நாடு செழிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றும் பிராா்த்தனை செய்தேன்’’, என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கோயில் துணை தலைமை செயல் அலுவலா் ஹரிந்திரநாத், அா்ச்சகா்கள் பாபு சுவாமி, ஏஇஓ தேவராஜுலு, கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.