ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.80 கோடி!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.80 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.80 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Published on

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.80 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,825 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,830 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.80 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

X
Dinamani
www.dinamani.com