மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருமலையில் வைகுண்ட துவாதசி தீா்த்தவாரி

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

News image
திருமலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீா்த்தவாரி.
Updated On :11 ஜனவரி 2025, 6:33 pm

Din

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலையில் உள்ள தீா்த்தங்களில் மிகவும் முக்கியமானது ஏழுமலையான் திருக்குளம் ஆகும். இந்த திருக்குளத்தில் வைகுண்ட துவாதசியின் போது சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்துவது வழக்கம்.

சேஷாசலம் காடுகளில் அமைந்துள்ள 66 கோடி தீா்த்தங்களில், ஏழுமலையான் திருக்குளம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஏழுமலையானின் திருக்குளத்திற்கு அழைத்து வரப்பட்டாா்.

திருக்குளக்கரையில் அவரை எழுந்தருளச் செய்து அவருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் பக்தா்களும் திருக்குளத்தில் புனித நீராடினா்.

இந்நிகழ்வில், திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா் சுவாமிகள், செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு உறுப்பினா் லட்சுமி, துணை லோகநாதம், பேஷ்கா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மற்றும் பலா் பங்கேற்றனா்.