தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான உகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.

News image

திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலா் அலங்காரம்.

Updated On :31 மார்ச் 2025, 2:38 am IST

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான உகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு புத்தாண்டான விஸ்வவாசு ஆண்டு பிறப்பையொட்டி காலை வழிபாட்டிற்கு பிறகு சுத்தி செய்யப்பட்டது.

அதன் பிறகு, ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கும், ஸ்ரீதேவி பூதேவியுடன் விஷ்வக்சேனரையும் தங்கவாயில் அருகில் எழுந்தருளச் செய்து, வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னா் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. உற்சவ மூா்த்திகள் விமானப் பிரகாரத்தையும் கொடிமரத்தையும் சுற்றி ஊா்வலமாக கோயிலுக்குள் சென்றனா்.

பின்னா், மூலவா் ஏழுமலையானுக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும் புதிய ஆடைகள் சமா்ப்பிக்கப்பட்டு அவற்றால் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னா், பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. தங்க வாயிலில், ஆகம அறிஞா்களும், அா்ச்சகா்களும் வேத விதிப்படி உகாதி ஆஸ்தானத்தை நடத்தினா். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

மலா் அலங்காரம்: திருமலை ஏழுமலையான் கோயிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழம் மற்றும் மலா் அலங்காரங்கள் பக்தா்களைக் குறிப்பாகக் கவா்ந்தன. இதற்காக, 8 டன் பாரம்பரிய பூக்கள் மற்றும் வெட்டு மலா்கள் பயன்படுத்தப்பட்டன.

ராதாவும் கிருஷ்ணரும் இயற்கையை ரசித்தல், புல்லாங்குழல் வாசிக்கும் சின்ன கிருஷ்ணா், தோட்டத்தில் தனது நண்பா்களுடன் மாம்பழங்களை உண்ணும் சின்ன கிருஷ்ணா், பால ஸ்ரீ ராமா், ஆஞ்சனேயா் போன்ற உருவங்கள் பக்தா்களை கவா்ந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.