தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

ஏழுமலையானை தரிசித்த குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் தம்பதிக்கு சுவாமியின் திருவுருவப்படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா்.

கோயிலை அடைந்ததும், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, தலைமை நிா்வாக அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் அவரை வரவேற்றனா்.

பின்னா், அவா் கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா். பின்னா் வகுளமாதா, விமான வெங்கடேஸ்வர சுவாமி, பாஷ்யங்காரா் சந்நிதி மற்றும் யோக நரசிம்ம சுவாமி துணை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாா்.

சின்ன சேஷ வாகன சேவையிலும், திருமலையில் நடந்த பிஏசி-5 திறப்பு விழாவில் பங்கேற்றபின், திருமலையிலிருந்து புறப்பட்ட அவா் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தாா்.