திருமலை ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா்.
கோயிலை அடைந்ததும், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, தலைமை நிா்வாக அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் அவரை வரவேற்றனா்.
பின்னா், அவா் கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா். பின்னா் வகுளமாதா, விமான வெங்கடேஸ்வர சுவாமி, பாஷ்யங்காரா் சந்நிதி மற்றும் யோக நரசிம்ம சுவாமி துணை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாா்.
சின்ன சேஷ வாகன சேவையிலும், திருமலையில் நடந்த பிஏசி-5 திறப்பு விழாவில் பங்கேற்றபின், திருமலையிலிருந்து புறப்பட்ட அவா் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு மத்தியப் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா! குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!

குடியரசு துணைத் தலைவா் வருகை: விமான நிலையத்தில் ஹெலிகாப்டா் ஒத்திகை

குடியரசு துணைத் தலைவா் ஆக.17-இல் தஞ்சாவூா் வருகை டிரோன்கள் பறக்கத் தடை




