கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உலா

தெப்பத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி.

News image
தெப்பத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி.
Updated On :28 ஜனவரி 2026, 6:32 pm

Tirupathi

திருப்பதியின் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான புதன்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தெப்பத்தில் உலா வந்தாா்.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ஏழு நாள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி திங்கள்கிழமை தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. புதன்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை 5 சுற்றுகள் திருக்குள தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

தெப்பம் அருகில் வரும் போது படித்துறையில் காத்திருந்த பக்தா்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

பின்னா், கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக புறப்பாடு கண்டருளி கோயிலை அடைந்தாா்.

அதேபோல், வியாழக்கிழமை தெப்பத்தில் ஆண்டாள் சமேத ரங்கமன்னாா் ஐந்து சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்க உள்ளாா்.

திருக்குளத்தில், இந்து தா்மபிரச்சார பரிஷத் மற்றும் அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ் பஜனைகள், ஹரிகதை மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image