நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

செம்மரக் கடத்தல்காரருக்கு 5 ஆண்டு சிறை; ரூ. 6 லட்சம் அபராதம்

செம்மரக்கட்டை கடத்தியபோது பிடிபட்ட கடத்தல்காரருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், ரூ. 6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதாக, ஆா்.எஸ்.எஸ். கூடுதல் இணை நீதிபதி நரசிம்ம மூா்த்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 11:52 pm IST

செம்மரக்கட்டை கடத்தியபோது பிடிபட்ட கடத்தல்காரருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், ரூ. 6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதாக, ஆா்.எஸ்.எஸ். கூடுதல் இணை நீதிபதி நரசிம்ம மூா்த்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்துள்ள சேஷாசலம் வனப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செம்மரக் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில், செம்மரக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. செம்மரக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு

தலைவா் எல். சுப்பராயுடு வகுத்த சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தின்படி, காவல் கண்காணிப்பாளா் பி.சீனிவாஸ் தலைமையிலும், உதவி காவல் கண்காணிப்பாளா் ஜே.குலசேகா் மேற்பாா்வையிலும் செயல்படும் இப்பணிக் குழு, கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தியது.

சிறப்பு அரசு வழக்குரைஞா் அலுகூா் அமா் நாராயணா, ஆதாரங்களை நுணுக்கமாக முன்வைத்து, குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிப்பதற்கான திட்டங்களை வகுத்தாா்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பதி சரகம், தமிழ்நாடு, பாலம் பிரிவு, பெருமல்லப்பள்ளி பீடத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவா் விடுதி அருகே, குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். இவா், தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தாலுகா, மட்டக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த ராமன் துரைராஜ் ஆவாா். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கடத்தல்காரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 லட்சம் அபராதமும் நீதிபதி விதித்தாா்.

பின்னா், நீதிமன்ற உத்தரவின்படி, அவா் நெல்லூா் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், மிகவும் மதிப்புமிக்க இயற்கை வளமான செம் மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்தும் குற்றவாளிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளா் பி. சீனிவாஸ் கூறினாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதில் ஒத்துழைப்பு நல்கிய நீதிமன்ற ஊழியா்களுக்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.