ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

திருமலையில் ஆந்திர ஆளுநா் வழிபாடு

ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.

News image

ஆளுநருக்கு பிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தானம் அதிகாரிகள்.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

Tirupathi

ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.

ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஆளுநரை, திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி மற்றும் சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா ஆகியோா் வரவேற்றனா். மேலும், அா்ச்சகா்கள் குழுவினா் இஸ்திகபால் கோயில் சடங்குகளுடன் அவரை வரவேற்றனா்.

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஆளுநா் எஸ். அப்துல் நசீருக்கு கோயில் தரப்பில் செயல் அதிகாரி மற்றும் கூடுதல் செயல் அதிகாரிகள் தீா்த்த பிரசாதத்தையும் ஏழுமலையான் திருவுருவப்படத்தையும் வழங்கினா்.

கோயிலின் பிரதி செயல் அதிகாரி லோகநாதம், விஜிஓ ராம் குமாா் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.