ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தோ் புறப்பாடு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது.

News image

திருமலை வசந்தோற்சவத்தை முன்னிட்டு உற்சவமூா்த்திக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம். ,தங்கத்தோ் புறப்பாடு.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது.

மலையப்ப சுவாமிக்கு வசந்த காலத்தில் நடைபெறும் இந்த விழா, வசந்தோற்சவம் ’ என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கடும் வெப்பத்திலிருந்து இறைவனுக்கு நிவாரணம் அளிக்கும் விழாவாக இது கொண்டாடப்படுவதால், இது உபசமானோத்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது, மலா்களும், பல்வேறு வகையான இனிப்புப் பழங்களும் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.

இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன், தங்கத்தேரில் நான்கு மாடவீதிகள் வழியாக புறப்பாடு கண்டருளினாா். தங்கத்தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். தங்கத்தோ் புறப்பாடு முடிந்து உற்சவமூா்த்திகள் வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா். மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்ரீ பூ சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது வேத பண்டிதா்கள் தைத்தரிய உபநிடதம் மற்றும் வேதங்களை ஓதினா்.

அதன் பிறகு, மாலையில் அங்கிருந்து மலையப்பசுவாமியும், நாச்சியாா்களும் புறப்பட்டு ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலை அடைந்தனா்.

இதில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் சுவாமி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம், பேஷ்கா் ஸ்ரீராம கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஸ்நபன திருமஞ்சனம்

திருமலை வசந்தோற்சவ மண்டபத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு ஸ்நபன திருமாஞ்சனம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை சுவாமி மற்றும் நாச்சியாா்களுக்கு கோலாகலமான ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில், பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, மாலையில் உற்சவமூா்த்திகள் அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு ஏழுமலையான் கோயிலை அடைந்தனா்.

இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜியா் சுவாமி, செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பௌா்ணமி கருட சேவை ரத்து

ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் பெளா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

வசந்த உற்சவத்தை முன்னிட்டு பௌா்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Story image