செய்யாறில் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் புதன்கிழமை பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
செய்யாறு பங்களா தெருவில் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.15 ஆயிரத்தை அறநிலைத் துறை நிர்வாகிகள் கணக்கெடுத்ததாகத் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் கோயில் அர்ச்சகர் பரத் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். புதன்கிழமை காலை அர்ச்சகர் கோயிலை திறந்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. மர்ம நபர்கள் மதில் சுவர் ஏறி கோயிலுக்குள் நுழைந்து, அலாரமணியின் மின்இணைப்பை துண்டித்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








