விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மானிய விலையில் நெல் விதைகள்: விவசாயிகளுக்கு அழைப்பு

மானிய விலையில் நெல் விதைகள், நுண்ணூட்டக்கலவை பெற்று பயனடைய அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 1:27 am

மானிய விலையில் நெல் விதைகள், நுண்ணூட்டக்கலவை பெற்று பயனடைய அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகிய ஐ.ஆர்.50, ஆடுதுரை 37 ரக விதைகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.10 மானியமும், 10 ஆண்டுகளுக்கு உள்பட்ட கோ.51 ரக விதைகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணூட்டக்கலவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், வேளாண்மை பண்ணைக் கருவிகள் பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பண்ணைக் கருவிகளைப் பெற்று பயனடையலாம்  என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.