மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோடி நன்மை தரும் கோடை உழவு : விவசாயிகளுக்கு ஆலோசனை

கோடி நன்மை தரும் கோடை உழவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 10:54 pm

DIN

கோடி நன்மை தரும் கோடை உழவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம். சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பாதாவது:
கோடை உழவு செய்வதற்கு இதுவே ஏற்ற தருணம். தற்சமயம் பரவலாக பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி உழவு செய்வது மிகவும் அவசியமாகும். முதலில் வயலை இரும்பு கலப்பைக் கொண்டோ, டிராக்டர் மூலமாகவோ குறுக்கும் நெடுக்குமாக ஆழமாக புழுதி பட உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோடையில் உழவு மேற்கொள்வதால், புல், பூண்டுகளின் வேர்கள் அறுந்து கருகி விடும். கடினத் தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து மண் மிருது தன்மை அடையும்.
பயிர் செய்யும் பருவ காலங்களில் சில வகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுப் புழுவாக மாறி, பேரீச்சம் பழக்கொட்டை போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் இவ்வகையான புழுக்கள் மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும். இதன்மூலம் அடுத்த பயிர் சாகுபடியின் போது, பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. களைச் செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. மண்ணில் நீர்ப் பிடிப்புத் தன்மை பெருகுகிறது. மண்ணின் பெளதீக தன்மை மேம்படுகிறது.
நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. மண் மிருது தன்மை பெறுவதால், அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு நாம் இடும் உரம் சமச் சீரான முறையில் கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன், பயிர் நன்கு செழித்து வளரும். இதனால், மகசூலும் கூடுதலாகக் கிடைக்கும்.
இவ்வாறு பல நன்மைகள் கிடைக்கக் கூடிய கோடை உழவை விவசாயிகள் அனைவரும் செய்து பயன் அடையலாம் என அந்தச் செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.