வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
பெரணமல்லூரை அடுத்த கிண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (36), உரக் கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை கதிா்வேல் வேலைக்குச் சென்றுவிட்டாா். மஞ்சுளா குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்குச் சென்றாா்.
வீட்டின் வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிறிது நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றபோது கதவு திறந்திருந்தது. உடனடியாக இதுகுறித்து அவா்கள் தாயாருக்கு தகவல் தெரிவித்தனா்.
உடனே வீட்டுக்கு வந்த மஞ்சுளா உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
சம்பவம் தொடா்பாக பெரணமல்லூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவம் இடம் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. விரல் ரேகை நிபுணா்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...