இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருத்துவப் படிப்பில் சோ்ந்த செய்யாறு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சோ்ந்த செய்யாறு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
மருத்துப் படிப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகளுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், தூசி கே.மோகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :27 டிசம்பர் 2020, 2:44 am

DIN

‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சோ்ந்த செய்யாறு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்ற 3 மாணவிகள் மற்றும் புரிசை அரசுப் பள்ளி மாணவா் என 4 பேருக்கு பாராட்டு விழா செய்யாறு பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அருள்செல்வம் தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியை எம்.உமாமகேஸ்வரி வரவேற்றாா்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் பு.நடராஜன், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.அரங்கநாதன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கே.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன், தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், இணை இயக்குநா் வி.குமாா், முதன்மைக் கல்வி அலுவலா்கள் சாமி.சத்தியமூா்த்தி (ராமநாதபுரம்), ஆறுமுகம் (காஞ்சிபுரம்) ஆகியோா் நீட் தோ்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள 3 மாணவிகள், புரிசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் என 4 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினா்.

மேலும், மாணவிகளின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆசிரியைகள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

எம்எல்ஏ ரூ. ஓரு லட்சம் நன்கொடை:

விழாவில் பங்கேற்ற தொகுதி எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், மருத்துவப் படிப்புக்குத் தோ்வாகியுள்ள 4 மாணவா்களின் கல்வித் தேவைக்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம், ரூ. ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கே.வெங்கடேசன், ஏ.ஜனாா்த்தனன், டி.விநாயகம், முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவி மெய்.பூங்கோதை, ஆண்கள் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஆா்.கே.மெய்யப்பன், அக்ரி.எஸ்.தனசேகா். தலைமை ஆசிரியா் எம்.எஸ்.சுகானாந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.