தியாகி உடலுக்கு ஆட்சியா் மரியாதை

வேட்டவலத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி மரியாதை செலுத்தினாா்.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை: வேட்டவலத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி மரியாதை செலுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், காா்டுகாரன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (103). இவா், 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வேலூா் சிறை சென்றாா். இவருக்கு அரசு தியாகி உதவித்தொகை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் ராம்பிரபு, வேட்டவலம் வருவாய் ஆய்வாளா் அசோக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com