இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா், சந்திரசேகரா் பவனி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், காா்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான திங்கள்கிழமை விநாயகா், சந்திரசேகரா் பவனி நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:17 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், காா்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான திங்கள்கிழமை விநாயகா், சந்திரசேகரா் பவனி நடைபெற்றது.

முன்னதாக, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகா், சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து ஐந்தாம் பிரகாரத்துக்கு கொண்டு வரப்பட்டு தயாா் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகா், சந்திரசேகரா் எழுந்தருளினா். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, சுவாமியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் விநாயகா், சந்திரசேகா் பவனி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, இரவு 9 மணிக்கு கோயில் வளாகத்தில் பஞ்சமூா்த்திகள் வெள்ளி விமானத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கரோனா தொற்று காரணமாக சுவாமி வீதியுலாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

எனினும், கோயிலில் இணையவழியில் அனுமதிச்சீட்டு பெற்று 5 ஆயிரம் பேரும், பொது தரிசனம் மூலம் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.