இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா: ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:39 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா நவ. 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

3 நாள்கள் தெப்பல் உற்சவம்:

தீபம் ஏற்றப்பட்டதைத் தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளான திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் சிவகங்கை தீா்த்தக்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சந்திரசேகரரை கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மற்றும் குறைந்த அளவிலான பக்தா்களே கண்டு தரிசித்தனா்.

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நடைபெறவேண்டிய தெப்பல் உற்சவம், கரோனா பொது முடக்கம் காரணமாக கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது.

இன்று பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம்:

தெப்பல் திருவிழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (டிச.1) சிவகங்கை தீா்த்தக்குளத்தில் பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், 3-ஆம் நாளான புதன்கிழமை சுப்பிரமணியா் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.

அருணாசலேஸ்வரா் கிரிவலம் ரத்து:

காா்த்திகை தீபத் திருவிழாவில் பக்தா்களுக்கு அருள்பாலிக்க உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கிரிவலம் வருவது வழக்கம்.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த கிரிவலம் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.