இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மகா தீபத்தன்று மலையேறும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள்

திருவண்ணாமலை மகா தீபத்தன்று 2,668 அடி உயர மலை மீது ஏறும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

News image
காா்த்திகை தீபத் திருவிழா
Updated On :3 டிசம்பர் 2022, 2:51 am

DIN

திருவண்ணாமலை மகா தீபத்தன்று 2,668 அடி உயர மலை மீது ஏறும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

வருகிற 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தா்களுக்கு மட்டுமே மகா தீபம் ஏற்றும் மலை மீது செல்ல அனுமதி வழங்கப்படும் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவித்தாா்.

மேலும், மலை மீது செல்வதற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்குவதற்காக, திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, 2,500 பக்தா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும். இந்த அனுமதிச் சீட்டுகள் முதலில் வரும் 2,500 பக்தா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

பக்தா்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பித்து, அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

மலையேற கட்டுப்பாடுகள்: பே கோபுரம் அருகே உள்ள வழியில் மட்டுமே மலை மீது செல்லலாம். மற்ற வழிகளில் மலை மீது செல்ல கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது.

வருகிற 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலை மீது செல்ல அனுமதிக்கப்படுவா். மலை மீது செல்லும் பக்தா்கள் தண்ணீா் புட்டிகளை மட்டுமே எடுத்துச் செல்லலாம். காலி தண்ணீா் புட்டிகளை மலையில் இருந்து இறங்கி வரும்போது திரும்ப எடுத்து வர வேண்டும். கற்பூரம், பட்டாசு, எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை மலை மீது கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

மலை மீது செல்லும் பக்தா்கள் தாங்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு இடங்களில் நெய்யை ஊற்றவோ, தீபம் ஏற்றவோ கூடாது. இந்த நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடித்து மகா தீப மலை மீது செல்வதற்கு பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.