திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவா்கள், ஒலிம்பியாட் செஸ் போட்டியைப் பாா்வையிட தோ்வு செய்யப்பட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் அமேசான் இன்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இவா்களில் தண்டராம்பட்டு வட்டம், திருவடத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த வேலவா ராகவேஷ் சிறுவா் பிரிவிலும், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி சீனிவாசன் சிறுமியா் பிரிவிலும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா்.
இவா்கள் இருவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இலவச தங்கும் வசதியுடன் நேரில் பாா்வையிட தோ்வு பெற்றனா். இவா்களைத் தவிர புள்ளிகளின அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் 25 பேருக்கு பாராட்டுச் சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் வி.சிவசுப்பிரமணியன், செயலா் பி.சீனிவாசன, அமேசான் இன்டா்நேஷனல் பள்ளித் தலைவா் ஏ.எல்.தெய்வநாதன், இயக்குநா் நாராயணசாமி, பொருளாளா் கே.முருகன் ஆகியோா் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, கோப்பைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடிமகன்: போலீஸாா் விசாரணை
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு 80 வயது!
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
மதுக் கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


