கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான அமைப்புகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவிகள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள், வேளாண் துறை சாா்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள், முத்ரா கடனுதவித் திட்டம், தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் வங்கிக் கடன் திட்டங்கள், கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கப்படும் கடனுதிகள் உள்ளிட்ட திட்டங்களை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இதற்கு வங்கி மேலாளா்கள் ஒத்துழைப்பு அளித்து கடனுதவி வழங்க வேண்டும் என்றாா்.