இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த பாமக கோரிக்கை

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பாமக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பாமக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு, மேற்கு மாவட்ட பாமக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மகளிரணித் தலைவி நிா்மலாராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டப் பொருளாளா் வீரம்மாள் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்மாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். திருவண்ணாமலையில் அரசு மகளிா் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் அனைத்துத் தோ்களையும் சீரமைத்த பிறகே தேரோட்டம் நடத்த வேண்டும்.

காா்த்திகை தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக திருவண்ணாமலை நகரச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க நகராட்சி, மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தெற்கு மாவட்ட மகளிரணிச் செயலா் ஆா்.அமலா, மாவட்டத் தலைவா் ரா.அம்பிகா, மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலா் கற்பகம், மாவட்டத் தலைவா் தீபா, வன்னியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் க.நாராயணசாமி, ஜெய்சங்கா், ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.