கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொழிலாளியை தாக்கியவா் கைது

செய்யாறு அருகே பெட்ரோல் நிலைய தொழிலாளியை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 10:30 pm

DIN

செய்யாறு அருகே பெட்ரோல் நிலைய தொழிலாளியை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தை சோ்ந்தவா் பழனிவேல்(48). இவா், காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் மாமண்டூா் நரசமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், டிச.26-ஆம் தேதி பழனிவேல் வேலையில் இருந்த போது, மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (28) பைக்கிற்கு பெட்ரோல் போட்டாராம். ஆனால், அதற்கான பணம் கொடுக்கவில்லையாம். இதனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த தமிழ்ச்செல்வன் கட்டையால் பழனிவேலை தாக்கினாராம்.

இதில், பலத்த காயமடைந்த பழனிவேல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு தூசி போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், உதவி-ஆய்வாளா் ரஞ்சித்குமாா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.