டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகள் சாா்-ஆட்சியரிடம் கோரிக்கை மனு

செய்யாற்றில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:07 pm

Din

செய்யாற்றில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகம் அருகே, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் மறைந்த விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.ஆா்.சிவசாமியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயிகளின் டிராக்டா் ஜப்தி நடவடிக்கை கைவிட வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா், இது தொடா்பான கோரிக்கை மனுவை சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

இதில், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன்,

பொருளாளா் சிறுங்கட்டூா் முருகன், விவசாயிகள் முனிரத்தினம், மண்ணு, வாசுதேவன், ஏழுமலை, ஏகாம்பரம், சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.