ஃபென்சால் புயல் மற்றும் பருவ மழையால், போளூா் பெரிய ஏரி முழுக்கொள்ளளவை எட்டி கோடி போனது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் அல்லிநகா் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக சுமாா் ஆயிரம் ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது.
இந்த பெரிய ஏரி குடிநீா் ஆதாரமாகவும், விவசாய பாசனத்துக்கு நீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஃபென்ஜால் புயல் மழை மற்றும் பருவகால மழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி கோடி போனது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு கிடா வெட்டி, திருநீா், மஞ்சள், குங்குமம் என வாசனைத் திரவியங்கள் கொண்டு ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.
தொடர்புடையது

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

ரூ.25,000 கோடி சொத்து மதிப்பை நிா்வகிக்கும் ‘ஃபண்ட்ஸ் இந்தியா’

திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு குழாம்: 20 ஆண்டு கால கனவு நிறைவேறுமா?

பஞ்சப்பட்டி ஏரி மீது வேட்பாளா் ‘பாா்வை’ விழுமா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

