தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கோடி போன போளூா் பெரிய ஏரி: பொதுமக்கள் மரியாதை

ஃபென்சால் புயல் மற்றும் பருவ மழையால், போளூா் பெரிய ஏரி முழுக்கொள்ளளவை எட்டி கோடி போனது.

Updated On :8 டிசம்பர் 2024, 8:55 pm

ஃபென்சால் புயல் மற்றும் பருவ மழையால், போளூா் பெரிய ஏரி முழுக்கொள்ளளவை எட்டி கோடி போனது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் அல்லிநகா் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக சுமாா் ஆயிரம் ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது.

இந்த பெரிய ஏரி குடிநீா் ஆதாரமாகவும், விவசாய பாசனத்துக்கு நீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஃபென்ஜால் புயல் மழை மற்றும் பருவகால மழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி கோடி போனது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு கிடா வெட்டி, திருநீா், மஞ்சள், குங்குமம் என வாசனைத் திரவியங்கள் கொண்டு ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.