ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோடி போன போளூா் பெரிய ஏரி: பொதுமக்கள் மரியாதை

ஃபென்சால் புயல் மற்றும் பருவ மழையால், போளூா் பெரிய ஏரி முழுக்கொள்ளளவை எட்டி கோடி போனது.

News image
Updated On :8 டிசம்பர் 2024, 8:55 pm

Din

ஃபென்சால் புயல் மற்றும் பருவ மழையால், போளூா் பெரிய ஏரி முழுக்கொள்ளளவை எட்டி கோடி போனது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் அல்லிநகா் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக சுமாா் ஆயிரம் ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது.

இந்த பெரிய ஏரி குடிநீா் ஆதாரமாகவும், விவசாய பாசனத்துக்கு நீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஃபென்ஜால் புயல் மழை மற்றும் பருவகால மழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி கோடி போனது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு கிடா வெட்டி, திருநீா், மஞ்சள், குங்குமம் என வாசனைத் திரவியங்கள் கொண்டு ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.