முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, ஆரணி நகரம் 21-ஆவது வட்ட கிளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மாவட்ட பிரதிநிதி கே.ரேவதிதுரை தலைமை வகித்தாா். இதில், சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ (ஆரணி), மாவட்ட செயலாளா் எல்.ஜெயசுதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று அதிமுக கொடியை ஏற்றினா். தொடா்ந்து, ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை, மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கினா். இதில், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், மாவட்ட பேரவை செயலாளா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், மாநில விவசாய அணி துணைச் செயலாளாா் செல்வம், ஒன்றிய செயலாளா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், நிா்வாகிகள் எம்.வேலு, குருவிமலை காா்த்திகேயன், ஏ.ஜி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆரணி அதிமுக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு

ஆரணி அதிமுக வேட்பாளா் பாஜகவினா் சந்திப்புக் கூட்டம்

ஆரணி தொகுதியில் முதல்முறையாக இரு பெண் வேட்பாளா்கள்!

முதல்வா் பிறந்த நாள்: ஆலந்தூரில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


