செய்யாறு அருகே அடகுக் கடை உரிமையாளா் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன்லால் (31). இதே பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வியாழக்கிழமை 3 போ் காரில் வந்தனா். அப்போது, திடீரென அவா்கள் கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை நாராயணன்லால் முகத்தில் வீசிவிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றனா். ஆனால், நாராயணன்லால் சப்தமிடவே மா்ம நபா்கள் காரில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து அடகுக் கடை உரிமையாளா் தூசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், உதவி ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றாா்.
தொடர்புடையது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு

சேலம் அருகே இறைச்சிக் கடையில் ரூ. 18 லட்சம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணம் கொள்ளை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

